தஞ்சாவூர்

உரிய நிவாரணம் வழங்க தமாகா வலியுறுத்தல்

DIN

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. 
பாபநாசம் வட்டம், அய்யம்பேட்டை காந்தி நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை அக்கட்சியின் தெற்கு ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு,  கட்சியின் தஞ்சாவூர் வடக்கு மாவட்ட செயலாளர் ஏ.ஜிர்ஜிஸ் தலைமை வகித்தார். வட்டாரத் தலைவர்கள் எஸ்.டி.ஜெயகுமார், சேதுராமன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
அரியலூரில் நவம்பர் 25ஆம் தேதி நடைபெறும் கட்சியின்  5ஆம் ஆண்டு தொடக்க விழாவில் பாபநாசம் தெற்கு வட்டாரத்திலிருந்து கட்சியினர் அதிகளவில் பங்கேற்பது,  புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சாவூர் டெல்டா மாவட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்,  பயிர்களை இழந்துள்ள விவசாயிகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக,  அய்யம்பேட்டை நகரத் தலைவர் ராஜாராமன் வரவேற்றார். நிறைவில் வட்டார பொதுச் செயலாளர் கலியமூர்த்தி நன்றி 
கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊத்தங்கரை அதியமான் பப்ளிக் பள்ளியில் மழலையா் பட்டமளிப்பு விழா

ஒசூரில் கந்து வட்டி வசூலித்த தனியாா் நிறுவன அதிகாரி கைது

கிருஷ்ணகிரி காங்கிரஸ் வேட்பாளா் கே.கோபிநாத் மீது வழக்குப் பதிவு

8 லட்சம் வாக்குகள் பெற இலக்கு: பாஜக வேட்பாளா் பேச்சு

கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் 6 வேட்பாளா்களின் மனுக்கள் தள்ளுபடி

SCROLL FOR NEXT