பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தியன் ஆயில் நிவாரணம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இந்தியன் ஆயில் முகவர்கள் புதன்கிழமை நிவாரண உதவி வழங்கினர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இந்தியன் ஆயில் முகவர்கள் புதன்கிழமை நிவாரண உதவி வழங்கினர்.
புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இரு லாரிகளில் பால் பவுடர்கள், ரொட்டிகள், பிஸ்கட்டுகள், மெழுகுவர்த்திகள், தீப்பெட்டிகள், 2,000 தண்ணீர் பாட்டில்கள், துண்டுகள் ஆகியவற்றை இந்தியன் ஆயில் நிறுவனத்தின் கும்பகோணம், திருவாரூர் முகவர்கள் ஏற்பாடு செய்தனர்.
இவற்றை பட்டுக்கோட்டையில் உள்ள மாவட்ட நிர்வாகத்தின் நிவாரண மையத்தில் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, உடுமலை கே. ராதாகிருஷ்ணன் ஆகியோரிடம் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் முதன்மைக் கோட்ட மேலாளர் (திருச்சி கோட்டம்) பாபு நரேந்திரா வழங்கினார். இதில், பலர் கலந்து கொண்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com