கும்பகோணம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் சனிக்கிழமை (அக். 20) மின் விநியோகம் இருக்காது.
இதுகுறித்து தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கும்பகோணம் நகர உதவிச் செயற் பொறியாளர் கருணாகரன் தெரிவித்திருப்பது: கும்பகோணம் சாக்கோட்டை துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை மாதாந்திர பாராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளன. எனவே, கும்பகோணம் நகர், நாச்சியார்கோவில், திருநாகேசுவரம், சுவாமிமலை, திருக்கருக்காவூர், வலங்கைமான், ஆலங்குடி, பாபநாசம், கபிஸ்தலம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
ஒரத்தநாடு பகுதியில்...
ஒரத்தநாடு துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை (அக். 20) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவிருப்பதால், இங்கிருந்து மின் விநியோகம் பெறும் ஒரத்தநாடு, கண்ணத்தங்குடி, ஆழிவாய்க்கால், புலவன்காடு, பின்னையூர், பூவத்தூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்று ஒரத்தநாடு மின்வாரிய செயற்பொறியாளர் கண்ணன் தெரிவித்துள்ளார்.