ஒரத்தநாட்டில் தேமுதிக கட்சியின் 14 ஆம் ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.
ஒரத்தநாடு தேமுதிக கிழக்கு ஒன்றியம், மேற்கு ஒன்றியம், நகர கழகம் சார்பில் தேமுதிக கட்சியின் 14 ஆம் ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சியாக ஒரத்தநாடு அண்ணாசிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. மேலும், கட்சி கொடி ஏற்றப்பட்டு இனிப்புகள் வழங்கினர்.
இந்நிகழச்சியில் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் தேவேந்திரன், கிழக்கு ஒன்றிய செயலாளர் பொன் துரைராஜன், மேற்கு ஒன்றிய செயலாளர் அறிவழகன், நகரச் செயலாளர் சரவணன், பொதுக்குழு உறுப்பினர் விஜய்ஆனந்தன் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.