திருவையாறு அருகே கோனேரிராஜபுரம் ரைஸ் மில் தெருவைச் சேர்ந்தவர் ஏ. சிவகுமார் (37). இவரது வீட்டில் பின்புறம் வழியாக புதன்கிழமை உள்ளே நுழைந்த நபர் பீரோவில் இருந்த ஒரு பவுன் நகையைத் திருடிக் கொண்டு வெளியே வந்தார்.
இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் அவரை விரட்டிப் பிடித்து நடுக்காவேரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.போலீஸாரின் விசாரணையில் அவர் நடுக்காவேரி அரசமரத் தெருவைச் சேர்ந்த கே. மணிவண்ணன் (26) என்பதும், மேலும், கருப்பூர் தெற்கு காலனியை சேர்ந்த பாஸ்கர் வீட்டில் 2 பவுன் நகை, ரூ. 17,000 ரொக்கம் திருடியிருப்பதும் தெரிய வந்தது. மணிவண்ணனை போலீஸார் கைது செய்தனர்.