பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் பிரதமரை சந்திக்கத் திட்டம்: பாஜக ஊடகப் பிரிவு தலைவர் பேட்டி

தமிழகத்தில் உள்ள பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் பிரதமரை அக்டோபர் இறுதிக்குள் சந்திக்கத் திட்டமிடப்பட்டுள்ளது

தமிழகத்தில் உள்ள பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் பிரதமரை அக்டோபர் இறுதிக்குள் சந்திக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்றார் பாஜக ஊடகப் பிரிவு மாநிலத் தலைவர் ஏ.என்.எஸ். பிரசாத்.
தஞ்சாவூரில் புதன்கிழமை மாலை செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தது: பாஜகவில் ஒவ்வொரு பூத் அளவிலும் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுக்களுக்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் உள்ள ஒன்றரை லட்சம் பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் பிரதமரை அக்டோபர் மாத இறுதிக்குள் சந்திக்கத் திட்டமிட்டுள்ளோம். தமிழகத்தில் நிச்சயமாகக் கூட்டணி அமைக்கப்படும். அது வெற்றிகரமான கூட்டணியாக இருக்கும். இதுகுறித்து ஏற்கெனவே பாஜக தலைவர் அமித்ஷா கூறியுள்ளார். தமிழகத்தில் ஊழலுக்கு எதிரான,  வளர்ச்சியை விரும்பும் கட்சிகள் எங்களுடன் கூட்டணி அமைக்கும். 
பாஜக தொண்டர்களிடையே எழுச்சி ஏற்பட்டுள்ளது. தமிழக மக்களும் மாற்று சக்தியை எதிர்பார்க்கின்றனர் என்றார் பிரசாத்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com