பண்டாரவாடையில் இந்திய கம்யூனிஸ்ட் பிரசாரக் குழு

பாபநாசம் அருகே பண்டாரவாடை கடைவீதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி- ஏஐடியுசி இணைந்த பிரசாரக் குழுவினர் வியாழக்கிழமை பிரசாரம் மேற்கொண்டனர்.

பாபநாசம் அருகே பண்டாரவாடை கடைவீதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி- ஏஐடியுசி இணைந்த பிரசாரக் குழுவினர் வியாழக்கிழமை பிரசாரம் மேற்கொண்டனர்.
வேதாரண்யத்தில் பிரசாரத்தை தொடங்கிய இக்குழுவினர் வியாழக்கிழமை 
பண்டாரவாடை கடைவீதிக்கு வந்தனர்.  அங்கு அந்த பகுதியின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொறுப்பாளர் நவநீதன் தலைமையில் முன்னாள் எம்எல்ஏ கோ.பழனிசாமி  கட்சிக் கொடியை  ஏற்றி வைத்தார். இதில் முன்னாள் எம்எல்ஏ  வை. சிவபுண்ணியம், முன்னாள் எம்.பி. எம்.செல்வராசு,  கட்சியின் மாவட்ட செயலாளர் மு.அ. பாரதி, துணை செயலாளர் குணசேகரன், ஏஐடியுசி மாவட்ட செயலாளர்ஆர். தில்லைவனம் உள்ளிட்டோர் பங்கேற்று இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்போம், இந்தியாவை பாதுகாப்போம் என்ற முழக்கத்தை வலியுறுத்தி பேசினர். இதில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளானோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com