பாபநாசம் அருகே தொழிலாளி வீட்டில் வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் கூரைவீடு முழுவதும் தீக்கிரையாயின.
பாபநாசம் அருகே கிழக்கு மாத்தூர் ஆற்றங்கரை தெருவைச் சேர்ந்த தொழிலாளி ஜெயராமன்(65), வெள்ளிக்கிழமை இரவு கூரை வீட்டை பூட்டி விட்டு கடைவீதிக்கு சென்றார்.
அப்போது, கூரை வீட்டில் திடீரென ஏற்பட்ட தீ அருகிலிருந்த மாட்டு கொட்டகைக்கும் பரவியது. இதனைக்கண்ட அக்கம் பக்கத்தினர் மாட்டுக் கொட்டகையிலிருந்த மாடுகளை அவிழ்த்து காப்பாற்றினர்.
மேலும் தீ பரவாமல் இருக்க தண்ணீரை ஊற்றி அணைத்தனர். இருப்பினும் தீ விபத்தில் வீட்டிலிருந்த வீட்டு உபயோகப் பொருள்கள் எரிந்து போனது. இதுகுறித்து அய்யம்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.