இடப்பிரச்னையால் கொத்தனார் வெட்டிக் கொலை

தஞ்சாவூர் அருகே திருகாட்டுப்பள்ளியில் இடப்பிரச்னை காரணமாக கொத்தனார் வெட்டிக் கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தஞ்சாவூர் அருகே திருகாட்டுப்பள்ளியில் இடப்பிரச்னை காரணமாக கொத்தனார் வெட்டிக் கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
 தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி இளங்காடு மேலத்தெருவைச் சேர்ந்த கருப்பையா மகன் மணிகண்டன் (43). கொத்தனார். இவருக்கு மனைவி, ஒரு மகள், இரு மகன்கள் உள்ளனர். மணிகண்டனுக்கும், பக்கத்து வீட்டைச் சேர்ந்த மோகனவேலுவுக்கும் சில ஆண்டுகளாக வீட்டு இடம் தொடர்பாக பிரச்னை இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக இருவருக்கும் அடிக்கடி தகராறும் நடந்துள்ளது.இந்நிலையில், இளங்காடு அருகே உள்ள வனத்தோட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு மணிகண்டன் உடல் முழுவதும் வெட்டுக் காயங்களுடன் கொலை செய்யப்பட்டுக் கிடந்துள்ளார்.
 இது குறித்து அப்பகுதியினர் அளித்த தகவலின் பேரில் அங்கு சென்ற திருக்காட்டுப்பள்ளி போலீஸார், மணிகண்டனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.முதல் கட்ட விசாரணையில் இடப்பிரச்னை காரணமாக மணிகண்டன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். இதனிடையே,  மணிகண்டனின் பக்கத்து வீட்டைச் சேர்ந்த மோகனவேலு தலைமறைவாக உள்ளார். மோகனவேலுவை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com