கும்பகோணத்தை அடுத்த திருவலஞ்சுழியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற ஒருவரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
திருவலஞ்சுழி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த அடைக்கலம் மகன் கண்ணன் (51). இவர் திருவலஞ்சுழி கடைவீதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்வதாக சுவாமிமலை போலீஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில், அவரது கடையில் போலீஸார் சோதனையிட்டனர்.சோதனையில், கடையினுள் ரூ.10,000 மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் இருப்பது கண்டறியப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். மேற்கண்ட புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸார், கண்ணனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.