பாபநாசம் அரகே அரசு அனுமதியின்றி மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த ஒருவரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
பாபநாசம் அருகே அம்மாபேட்டை காவல் சரகம், பூண்டி தோப்பு தெருவை சேர்ந்தவர் நாராயணமூர்த்தி (34). இவர் பூண்டி ரேஷன் கடைப் பகுதியில் அரசு அனுமதியினன்றி மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தாராம்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற அம்மாபேட்டை போலீஸார் நாராயணமூர்த்தியை கைது செய்து அவரிடமிருந்த 50 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.