தஞ்சாவூரில் உலகத் திருக்குறள் பேரவை, ஹோட்டல் பரிசுத்தம் சார்பில் சித்திரையில் ஒரு முத்திரை விழா, மத நல்லிணக்க விழா அண்மையில் நடைபெற்றது.
பரிசுத்தம் ஹோட்டல் நிர்வாக இயக்குநரும், பரிசுத்தம் பொறியியல் கல்லூரி தாளாளருமான செ.ப. அந்தோணிசாமி தலைமை வகித்தார்.
மகாராஜா ஆயத்த ஆடைகள் உரிமையாளர் சா. ஆசிப் அலி பேசினார்.
மேலும் எட்டாவது சீர் என்ற தலைப்பில் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறைத் தலைவர் ய. மணிகண்டன் சிறப்புரையாற்றினார்.
திருக்குறள் கல்வி மையத்தால் பயிற்றுவிக்கப்பட்டு, 1330 குறளையும் ஒப்பித்த 9 மாணவர்கள் பாராட்டப்பட்டனர்.
முன்னதாக, பேரவையின் செயலர் பழ. மாறவர்மன் வரவேற்றார். இறுதியாக புலவர் ந. சண்முகம் நன்றி கூறினார்.