தஞ்சாவூர் நீதிமன்றத்தில் வழக்குரைஞர்கள் செவ்வாய்க்கிழமை கருப்புத் தினத்தையொட்டி நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு பிப். 19-ம் தேதி போலீஸார் புகுந்து வழக்குரைஞர்களைத் தாக்கினர். ஆண்டுதோறும் இந்த நாளை வழக்குரைஞர்கள் கருப்பு நாளாக அனுசரித்து வருகின்றனர். இதையொட்டி, தஞ்சாவூரில் உள்ள வழக்குரைஞர்கள் செவ்வாய்க்கிழமை நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.