கும்பகோணம்  ஆசிகா தங்க மாளிகையின் 21 ஆம் ஆண்டு விழா

கும்பகோணம் நாகேசுவரன் வடக்கு வீதியில் உள்ள ஆசிகா தங்க மாளிகையின் 21 ஆம் ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கும்பகோணம் நாகேசுவரன் வடக்கு வீதியில் உள்ள ஆசிகா தங்க மாளிகையின் 21 ஆம் ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆசிகா தங்க மாளிகையின் நிறுவனர் ஜெகபர் சாதிக் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் சிறப்பு விற்பனை தொடங்கியது. சிறப்பு விற்பனைக்கான பரிசுப் போட்டியை கும்பகோணம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் சாக்கோட்டை க. அன்பழகன் தொடங்கி வைத்தார். கும்பகோணம் கோட்டாட்சியர் வீராசாமி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு வாடிக்கையாளர்களுக்குப் பரிசுகள் வழங்கினார். த.மா.கா. மாவட்டத் தலைவர் ஜிர்ஜிஸ்,  நகர அம்மா பேரவை செயலர் அயூப்கான், தி.மு.க. மாவட்டச் செயலர் எஸ். கல்யாணசுந்தரம், சுப. தமிழழகன், சென்னை தொழிலதிபர்கள் லுத்துபுல் ஹக், நந்தா கிஷோர், அரசு உயர் அலுவலர்கள், பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
விழாவுக்கான ஏற்பாடுகளை கும்பகோணம் ஆசிகா தங்கமாளிகையின் இயக்குநர்கள், ஊழியர்கள், நிர்வாகிகள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com