பேராவூரணி குமரப்பா பள்ளியில் பொங்கல் விழா

தஞ்சாவூர் மாவட்டம்,  பேராவூரணி டாக்டர் ஜே.சி.குமரப்பா மேல்நிலைப்பள்ளியில் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.


தஞ்சாவூர் மாவட்டம்,  பேராவூரணி டாக்டர் ஜே.சி.குமரப்பா மேல்நிலைப்பள்ளியில் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு நன்றி செலுத்தும் நாளாக நடத்தப்படும் இந்த விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு மெட்ரிக். பள்ளிகள் சங்க மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் முனைவர் ஜி.ஆர்.ஸ்ரீதர்  விழாவில் பங்கேற்று பேசும் போது, மாணவர்கள் தங்களுக்கு உதவி செய்த அனைவருக்கும் நன்றி உடையவர்களாக இருப்பது மிக அவசியம். அந்த வகையில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக குமரப்பா பள்ளி ஒவ்வொரு ஆண்டும் இவ்விழாவை  சிறப்பான முறையில் கொண்டாடி வருகிறது. நமக்கு உரிய நேரத்தில் உதவியவர்களை போற்றுபவர்கள் வாழ்க்கையில் ஒருபோதும் தோற்பதில்லை என்றார். பேராவூரணி வட்டாட்சியர் எல்.பாஸ்கரன், பள்ளி அறங்காவலர்கள் மா.ராமு, மா.கணபதி, ஆனந்தன், அஸ்வின்ஸ்ரீதர், பிரியதர்ஷினி உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிறைவில் பள்ளி முதல்வர் சுரேஷ் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com