ஆட்சியரகத்தில் சமத்துவப் பொங்கல் விழா

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் சமத்துவப் பொங்கல் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் சமத்துவப் பொங்கல் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் அனைவருக்கும் பொங்கல், கரும்பு, வாழைப்பழம் வழங்கப்பட்டது. மேலும், அனைவருக்கும் ஆட்சியர் பொங்கல் வாழ்த்து கூறினார். இந்நிகழ்ச்சியில் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முத்துமீனாட்சி,  மகளிர் திட்ட அலுவலர் இந்துபாலா,  மாவட்ட வழங்கல் அலுவலர் அழகர்சாமி, தஞ்சாவூர் கோட்டாட்சியர் சி. சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com