அனுமதியின்றி மதுபானம் விற்ற 6 பேர் கைது

கும்பகோணத்தில் அனுமதியின்றி மதுபானம் விற்பனை செய்த 6 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

கும்பகோணத்தில் அனுமதியின்றி மதுபானம் விற்பனை செய்த 6 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
திருவள்ளுவர் தினமான புதன்கிழமை டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், கும்பகோணத்தில் சட்ட விரோதமாக மதுபானம் விற்கப்படுவதாக போலீஸாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, போலீஸார் வளையப்பேட்டை, சந்தனாள்புரம், கருப்பூர், கொரநாட்டுக்கருப்பூர், மணஞ்சேரி, தேனாம்படுகை, தாராசுரம், பெருமாண்டி ஆகிய பகுதிகளில் போலீஸார் சோதனை நடத்தினர். இதில், அனுமதியின்றி மதுபானம் விற்றதாக விக்னேஷ் (27), அஜீத் (20), காளிமுத்து (22), பிரபாகரன் (39), ரவிக்குமார் (44), கார்த்தி (31) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com