சைகை மொழியில் குர்ஆன் பயிற்சி

அதிராம்பட்டினத்தில் பேச இயலாத, காது கேளாதோருக்கான குர்ஆன் மற்றும் ஹதீஸ் விளக்கம் பற்றி சைகை மொழியில்


அதிராம்பட்டினத்தில் பேச இயலாத, காது கேளாதோருக்கான குர்ஆன் மற்றும் ஹதீஸ் விளக்கம் பற்றி சைகை மொழியில் கற்றறியும் 1 நாள் பயிற்சி வகுப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில், கோவையிலுள்ள பேச இயலாத, காது கேளாதோருக்கான ஒருங்கிணைந்த அமைப்பின் பயிற்றுநர் எப். பாசித் ரஹ்மான் கலந்து கொண்டு சைகை மொழி மற்றும் காணொளி மூலம் பயிற்சியளித்தார். நிகழ்ச்சியில் கலந்து கொண்டோர் இஸ்லாம் மார்க்கம் தொடர்பாக எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தார். அதிராம்பட்டினத்தில் வாழும் மாற்றுத்திறனாளிகள், பேச இயலாதோர், காது கேளாதோர் நலச்சங்கத் தலைவர் எஸ்.எம்.ஒய். ஹாஜா சரீப் தலைமை வகித்தார். துணைத் தலைவர் ஏ.சிராஜுதீன், பொருளாளர் ஆர்.மன்சூர் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com