தஞ்சாவூர் திருவள்ளுவர் திரையரங்கத்தைப் பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் வணிக வளாகமாக மாற்றுவது குறித்த ஆலோசனை கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்குத் மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தலைமை வகித்தார். இதில், தஞ்சாவூர் மாநகராட்சிக்குச் சொந்தமான திருவள்ளுவர் திரையரங்கத்தைப் பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் பல்நோக்கு வணிக வளாகமாக மாற்றவது குறித்து மாநகராட்சி அலுவலர்களுடன் ஆலோசிக்கப்பட்டது. இந்த ஒருங்கிணைந்த வளாகத்தில் திரையரங்குடன் கூடிய வணிக வளாகமும், தஞ்சாவூர் மாவட்டத்தின் சிறப்புகளை பிரதிபலிக்கும் வகையில் கலைநயத்துடன் கூடிய கட்டட அமைப்புகளும் அமைக்கப்பட வேண்டுமென ஆட்சியர் ஆலோசனை வழங்கினார். இக்கூட்டத்தில் தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் (பொ) ப. காளிமுத்து, மாநகராட்சி பொறியாளர் ராஜ்குமரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.