பாபநாசம் அருகே மூவருக்கு கத்திக்குத்து

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே பெண் உள்ளிட்ட மூவரைக் கத்தியால் குத்திய மூவரை போலீஸார் சனிக்கி


தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே பெண் உள்ளிட்ட மூவரைக் கத்தியால் குத்திய மூவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
பாபநாசம் அருகே திருவையத்துகுடி கிராமம், காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பழனி மகன் கனகராஜ். இவரது குடும்பத்தினருக்கும், அதே கிராமத்தைச் சேர்ந்த ரவி குடும்பத்தினருக்கும் முன்விரோதம் இருந்தது.
இந்நிலையில் ரவி மகன்கள் ராஜேஷ், செல்வகுமார், பாலகிருஷ்ணன், உறவினர்கள் சூர்யா, குமரேசன், தினேஷ் உள்ளிட்டோர் கனகராஜ் அவரது அண்ணன் பாலமுருகன், 
அண்ணி சத்யா உள்ளிட்டோரை கம்பி, கட்டைகளால் தாக்கினராம்.
இதில் காயமடைந்தோர் தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். கனகராஜ் கொடுத்த புகாரின் பேரில் பாபநாசம் போலீஸார் வழக்குப் பதிந்து ராஜேஷ் (20), பாலகிருஷ்ணன் (45),சூர்யா (21) உள்ளிட்ட மூவரைக் கைது செய்தனர். செல்வக்குமார், தினேஷ், குமரேசன் உள்ளிட்டோரை தேடுகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com