கும்பகோணத்தில் அரிசி கடையில் திருட்டு

கும்பகோணம் துக்காம்பாளையத் தெருவை சேர்ந்தவர் லெட்சுமணன் மகன் செல்வராஜ் (39).

கும்பகோணம் துக்காம்பாளையத் தெருவை சேர்ந்தவர் லெட்சுமணன் மகன் செல்வராஜ் (39). இவர் கும்பகோணம் இந்திராகாந்தி சாலையில் அரிசி கடை நடத்தி வருகிறார்.
இவர் ஞாயிற்றுக்கிழமை இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார். திங்கள்கிழமை காலை வந்து பார்த்தபோது கடையின் ஷட்டரிலிருந்த பூட்டுகள் திறக்கப்பட்டு  கடை திறந்து கிடந்தது. 
கடையினுள் சென்று பார்த்தபோது, கடையிலிருந்த பணப்பெட்டியை உடைத்து அதிலிருந்த ரூ. 30 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. சம்பவம் குறித்த புகாரின்பேரில் கும்பகோணம் மேற்கு காவல் நிலைய போலீஸார் விசாரிக்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com