பட்டுக்கோட்டையில் தஞ்சாவூர் மாவட்ட ஜங்கம் சமூக நலச் சங்க குடும்ப விழா அதன் தலைவர் பி. சுந்தரம் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சங்க நிர்வாகிகள் வி.கே.எஸ். நாடிமுத்து, கே.எஸ். சிங்காரவேலு, என்.ஆர். வேணுகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜி. முருகையன், வி. சிவலிங்கம் ஆகியோர் அறிக்கை வாசித்தனர். சங்கத்தின் அகில இந்தியத் தலைவர் சென்னை கே. சின்னையா, பொதுச் செயலர் வி. கருணாநிதி, சேலம் மாவட்டத் தலைவர் ஜி. கலியமூர்த்தி ஆகியோர் சிறப்புரையாற்றினர். விழாவில், 10 மற்றும் 12ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு நினைவுப் பரிசு மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. தொடக்கத்தில், ஜி. தர்மராஜ் வரவேற்றார். நிறைவாக, என்.இ.கே. முருகதாஸ் நன்றி கூறினார்.