பொள்ளாச்சி சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் தூக்கிலிட வலியுறுத்தி தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் முன் தமிழ்நாடு மாணவர் இயக்கம் மற்றும் தமிழ்நாடு இளைஞர் இயக்கத்தினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பொள்ளாச்சி சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரையும் தூக்கிலிட வேண்டும். குற்றவாளிகளுக்கு ஆதரவாகச் செயல்படும் காவல் துறையைச் சேர்ந்த அனைவரையும் பணியில் இருந்து விடுவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். தமிழ்நாடு மாணவர் இயக்க மாநிலப் பொதுச் செயலர் பிரபாகரன் தலைமையில் பலர் கலந்து கொண்டனர்.