திருச்சி மாவட்டம் தொட்டியம் மற்றும் முசிறி பகுதியில் சட்ட விரோதமாக நடத்தப்படும் மதுபானக் கடைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
தொட்டியம் வட்டம் மணமேடு பகுதியிலும் மற்றும் முசிறி நகர் பகுதியில் பல்வேறு இடங்களிலும் சட்ட விரோதமாக அரசு மது பானம் விற்கப்படுவதாகவும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை என சமூக ஆர்வலரும், விசிக கட்சி முசிறி தொகுதி செயலாளர் கலைச்செல்வன் தெரிவித்தார்.