குற்றச்செய்திகள்

மூதாட்டியிடம் நகை பறிப்பு: திருச்சி வயலூர் சாலை,  கனரா வங்கி காலனியைச் சேர்ந்தவர் சக்கரியாஸ் மனைவி டெய்சி (78).  சனிக்கிழமை வீட்டில் தனியாக இருந்த இவர் வீட்டின் பின்பக்க கதவைத் திறந்த நிலையில், மர்ம நபர் ஒருவர் உள்ளே நுழைந்து, டெய்சியின் கழுத்தில் கிடந்த 3 சவரன் நகையை பறித்துச் சென்றுவிட்டார். புகாரின்பேரில் உறையூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


செல்லிடபேசி திருடியவர் கைது: திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் பகுதியை அடுத்துள்ள மான்பிடி மங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் கா. பிரபாகரன் (23). இவர் சேலத்திலிருந்து மத்திய பேருந்து நிலையம் வந்தபோது அவரது சட்டைப்பையிலிருந்த விலை  உயர்ந்த செல்லிடபேசியை ஒருவர் எடுத்துக்கொண்டு தப்ப முயன்றார். அவரைப் பிடித்து புறக்காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் மது ரை அழகர்கோயில் அருகே தொப்புளாம்பட்டியைச் சேர்ந்த ர. முருகன் (45) என்பது தெரியவந்தது. அவரைக் கைது செய்த போலீஸார் செல்லிடபேசியை மீட்டனர்.


பெண் தற்கொலை: திருச்சி பாலக்கரை ஆலம் தெருவைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் மனைவி கௌசல்யா (50). இவருக்கு ரத்த உயரழுத்தம், டயபடிஸ் உள்ளிட்ட நோய்கள் இருந்துள்ளன. பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகாததால் விரக்தியிலிருந்தார். இதையடுத்து நவ. 8-ல் எலி விஷத்தை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்ற இவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை இறந்தார். பாலக்கரை போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com