முத்திரைக் கொல்லர் பணி: எழுத்துத் தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்துக்கு...

தொழிலாளர் துறையில் காலியாக உள்ள முத்திரைக் கொல்லர் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வுக்கு விண்ணப்பித்து, தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு பெறாதவர்கள் தேர்வர்கள் நவ. 29,30 தேதிகளில் அணுகலாம்

தொழிலாளர் துறையில் காலியாக உள்ள முத்திரைக் கொல்லர் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வுக்கு விண்ணப்பித்து, தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு பெறாதவர்கள் தேர்வர்கள் நவ. 29,30 தேதிகளில் அணுகலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருச்சி தொழிலாளர் உதவி ஆணையர் ( அமலாக்கம்) திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தொழிலாளர் துறையில் திருச்சி கூடுதல் தொழிலாளர் ஆணையர் மண்டலத்தில் காலியாக உள்ள முத்திரைக் கொல்லர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு டிசம்பர் 2 ஆம் தேதி காலை 10 மணி முதல் 12 மணி வரை திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் நடைபெற உள்ளது. தகுதியின் அடிப்படையின் விண்ணப்பதாரர்களின் முகவரிக்கு அஞ்சல் மூலம் எழுத்துத் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு அனுப்பப்பட்டுள்ளது. நுழைவுச்சீட்டு பெறாத தகுதியுடைய விண்ணப்பதாரர்கள், திருச்சி மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் ( அமலாக்கம்) அலுவலகத்தை நவ. 29,30 ஆம் தேதிக்குள் நேரில் அணுகி நுழைவுச்சீட்டு நகலைப் பெற்றுக் கொள்ளலாம்.
இதை பெற வரும் விண்ணப்பதாரர்கள், தங்களது ஏதேனும் ஒரு அடையாள அட்டையுடன், அதன் நகலில் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை ஒட்டி அ அல்லது ஆ பிரிவு அரசு அலுவலரிடம் சான்றொப்பம் பெற்று வர வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com