கோரிக்கைகளை வலியுறுத்தி, திருச்சியில் அஞ்சல் ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை, தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அஞ்சல்துறை கூட்டு போராட்டக்குழு சார்பில் திருச்சி தலைமை அஞ்சலக வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு என்.எப்.பி.இ. தொழிற்சங்க கோட்டச் செயலாளர் குணசேகரன், எப்.என்.பி.ஓ. மண்டல செயலாளர் ஆறுமுகம் ஆகியோர் தலைமை வகித்தனர்.
காலிப்பணியிடங்களை நிரப்புவதுடன், பிற துறைகளிலிருந்து மாற்றுப்பணிக்காக நியமிக்கப்பட்டவர்களை திரும்பப் பெற வேண்டும். 1.1.1996 ஆவது ஆண்டு முதல் நிலுவையில் உள்ள தொகையை வழங்க வேண்டும். ஊதிய உயர்வில் உள்ள முரண்பாடுகளை அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தில் என்.எப்.பி.இ. தொழிற்சங்க நிர்வாகிகள் கோவிந்தராஜ், பிரபாகர், எப்.என்.பி.ஓ. நிர்வாகிகள் வரதராஜன், ரத்தினசாமி உள்ளிட்ட ஏராளமான அஞ்சல் ஊழியர்கள் பங்கேற்றனர்.