பன்றிக் காய்ச்சல்: இளைஞருக்கு சிகிச்சை

லால்குடியைச் சேர்ந்த இளைஞர் பன்றிக்காய்ச்சல் அறிகுறியுடன் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

லால்குடியைச் சேர்ந்த இளைஞர் பன்றிக்காய்ச்சல் அறிகுறியுடன் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 
லால்குடி அருகே கீழ அன்பில் கிராமத்தைச் சேர்ந்த மணி மகன் சரவணன்(22). தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் இவருக்கு சில நாள்களாக தொடர் காய்ச்சல் இருந்துள்ளது. லால்குடி அரசு மருத்துவமனையில் ரத்த மாதிரி பரிசோதனை செய்ததில் பன்றிக் காய்ச்சல் அறிகுறி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com