லால்குடியைச் சேர்ந்த இளைஞர் பன்றிக்காய்ச்சல் அறிகுறியுடன் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
லால்குடி அருகே கீழ அன்பில் கிராமத்தைச் சேர்ந்த மணி மகன் சரவணன்(22). தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் இவருக்கு சில நாள்களாக தொடர் காய்ச்சல் இருந்துள்ளது. லால்குடி அரசு மருத்துவமனையில் ரத்த மாதிரி பரிசோதனை செய்ததில் பன்றிக் காய்ச்சல் அறிகுறி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.