துறையூர் நூலக வாசகர் வட்டத்துக்கு அரசு விருது

துறையூர் கிளை நூலக வாசகர் வட்டம் வாசகர்களை ஈர்க்கவும், வாசிப்பு பழக்கத்தை பொதுமக்களிடம்

துறையூர் கிளை நூலக வாசகர் வட்டம் வாசகர்களை ஈர்க்கவும், வாசிப்பு பழக்கத்தை பொதுமக்களிடம் அதிகரிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இந்நிலையில் தமிழக அரசு நூலகத் துறை  அறிவித்திருந்த சிறந்த வாசகர் வட்டத்துக்கான நூலக ஆர்வலர் விருதுக்கு துறையூர் வாசகர் வட்டத்தை தேர்வு செய்து விருது வழங்கியது. அண்மையில் சென்னையில் நடைபெற்ற அரசு விழாவில் பள்ளி கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் துறையூர் வாசகர் வட்டத் தலைவர் தி.நடராஜனிடம் நூலக ஆர்வலர் விருது வழங்கினர். அப்போது, கிளை நூலகர் பெ. பாலசுந்தரம் உடனிருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com