ஆட்டோ மீது மரம் விழுந்ததில்  ஓட்டுநர் சாவு

திருச்சியில் கஜா புயலால் ஆட்டோ மீது மரம் விழுந்து அமுக்கியதில் ஆட்டோ ஓட்டுநர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

திருச்சியில் கஜா புயலால் ஆட்டோ மீது மரம் விழுந்து அமுக்கியதில் ஆட்டோ ஓட்டுநர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
திருச்சி மாவட்டம், நவல்பட்டு  பர்மா காலனி பக்தவச்சலம் நகரைச் சேர்ந்தவர் துரைசாமி (62). ஓய்வு பெற்ற துப்பாக்கித் தொழிற்சாலை ஊழியரான இவர், நவல்பட்டு பகுதியில் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அப்போது, சாலையோரம் இருந்த மரம் பெயர்ந்து ஆட்டோ  மீது விழுந்து நசுங்கியது. இதில் இடிபாடுகளில் சிக்கிய துரைசாமி நிகழ்விடத்தில் உயிரிழந்தார். மரம் அப்புறப்படுத்தப்பட்டு உடல் மீட்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com