துறையூர் சிவன் கோயிலில் கார்த்திகை மாத சோம வாரத்தை முன்னிட்டு 108 சங்காபிஷேகம் நடைபெற்றது.
துறையூர் ஆத்தூர் சாலையில் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான அருள்மிகு சம்பத் கௌரி உடனுறை ஸ்ரீ நந்திகேஸ்வரர் சிவன் கோயில் உள்ளது.
இங்கு கார்த்திகை மாதம் முதல் திங்கள்கிழமை(நவ.19)யையொட்டி மூலவர் நந்திகேஸ்வரருக்கும், அம்பாளுக்கும் பல்வேறு பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். நீர் நிரப்பப்பட்ட கலசம் மற்றும் 108 சங்குகள் முன்பு கோயில் குருக்கள் அமர்ந்து முறைப்படி மந்திரங்கள் ஓதினர். அதன் பின்னர் மூலவருக்கு சங்கு அபிஷேகம் நடைபெற்றது. மூலவருக்கு புது வஸ்திரம் சாற்றி மகா தீபாரதனை நடைபெற்றது.
இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.