திருச்சி கீழரண்சாலையில் ஏடிஎம் மையத்தில் கேமரா திருட்டு போன வழக்கில் தேடப்பட்டு வந்த இருவர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர்.
திருச்சி கீழரண்சாலை பகுதியிலுள்ள தனியார் வங்கி ஏ.டி.எம். மையத்தில் இருந்த கேமராக்கள் அண்மையில் திருட்டுப் போனதாகக் கூறி, வங்கியின் கேமரா கண்காணிப்பு அலுவலர் எஸ். ரபிசிந்துராஜ் கோட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் போரில் போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், கீழரண்சாலை சத்தியமூர்த்தி நகர் மு. செல்வம் (19), அவரது நண்பர் நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அருகிலுள்ள கொத்தமங்கலம் அரசமங்கலம் காலனி கோபாலகிருஷ்ணன் (21) ஆகியோர் கேமராக்களைத் திருடிச் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.