மருங்காபுரி அருகே பொன்னம்பட்டி பேரூராட்சியில் காசநோய் கண்டுபிடிப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்ட காசநோய் மையம் சார்பில் நடைபெற்ற முகாமிற்கு பேரூராட்சி செயல் அலுவலர் ச.சாகுல் அமீது தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மாவட்ட காசநோய் மைய துணை இயக்குநர் மருத்துவர் எஸ்.சாவித்திரி, காசநோய் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து எடுத்துரைத்தார்.
மருத்துவர்கள், பேரூராட்சி ஊழியர்கள் பங்கேற்றனர். முன்னதாக, பேரூராட்சி மின்பணியாளர் பழனி வரவேற்றார். முடிவில், புத்தாநத்தம் முதுகலை சிகிச்சை மேற்பார்வையாளர் எஸ்.சம்சுதீன் நன்றி கூறினார்.