ஷீரடி சாய்பாபாவின் 100ஆவது புண்ணிய தசமி திதிநாள் விழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை ஊர்வலம் நடைபெற்றது.
மணப்பாறை சாயிநகரில் உள்ள ஸ்ரீ வேப்பிலை சாய்நாதர் ஊர்வலம் வானவேடிக்கையுடன் புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக விராலிமலை சாலை சாய்நகரில் உள்ள கோயிலை வந்தடைந்தது.
மணப்பாறை சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.சந்திரசேகர், திரளான மக்கள் பங்கேற்று வழிபட்டனர். தொடர்ந்து, பாபாவிற்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்று பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.