துவரங்குறிச்சியில் ஸ்ரீ பூதநாயகி அம்மன் கோயிலில் புரட்டாசி திருவிழா திங்கள்கிழமை பூச்சொரிதலுடன் தொடங்கியது.
துவரங்குறிச்சியில் உள்ள ஸ்ரீ பூதநாயகி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி திருவிழா பூச்சொரிதலுடன் தொடங்கி 18 நாள்கள் நடைபெறும். நிகழாண்டு, பூச்சொரிதலுடன் தொடங்கிய வருடாந்திர விழாவில் மணப்பாறை சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.சந்திரசேகர் கலந்து கொண்டார். தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை காப்புக் கட்டுதலும், செப்.25ஆம் தேதி முதல் ஊர் முக்கியஸ்தர்களின் மண்டகப்படி நடைபெற உள்ளது. முக்கிய நிகழ்வான பொன்னூஞ்சல் நிகழ்ச்சி அக்.2ஆம் தேதி நடைபெறுகிறது. அக்.4-இல் விடையாற்றி நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.