திருச்சி

பெரியார் பிறந்தநாள்: சிலைக்கு அரசியல் கட்சியினர் மரியாதை

DIN

பெரியாரின் 140ஆவது பிறந்த நாளையொட்டி திருச்சி மத்திய பேருந்துநிலையம் அருகேயுள்ள அவரது சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் திங்கள்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதிமுக சார்பில் மாநகர் மாவட்டச் செயலரும், மக்களவை உறுப்பினருமான ப.குமார் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில், அமைச்சர்கள் வெல்லமண்டி என். நடராஜன், அமைப்புச் செயலர் மு.பரஞ்ஜோதி, முன்னாள் அமைச்சர்கள் என். நல்லுசாமி, கே.கே. பாலசுப்பிரமணியன், மாவட்ட துணைச் செயலர் வி.  அருள்ஜோதி, மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலர் வி. பத்மநாபன், மாவட்ட மகளிரணிச் செயலர் எஸ். தமிழரசி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திமுக: முன்னாள் அமைச்சரும், மாவட்டச் செயலருமான கே.என்.நேரு தலைமையில், அக் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.நிகழ்ச்சியில், வடக்கு மாவட்டச் செயலர் காடுவெட்டி தியாகராஜன், எம்எல்ஏ-க்கள் அ.சௌந்தரபாண்டியன், செ. ஸ்டாலின்குமார், முன்னாள் எம்எல்ஏ-க்கள் அன்பில் பெரியசாமி, பரணிகுமார், மாநகரச் செயலர் மு. அன்பழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அமமுக:  கட்சியின் மாவட்டச் செயலர்கள் ஆர். மனோகரன், ஜெ. சீனிவாசன், எம். ராஜசேகரன், அமைப்புச் செயலர் சாருபாலா தொண்டைமான் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
திராவிடர் கழகம்: கட்சியின் மாவட்டத்தலைவர் ஆரோக்கியராஜ் தலைமையில், மாவட்டச் செயலர் மோகன், மண்டலச் செயலர் ஆல்பர்ட் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 
மதிமுக சார்பில், மாவட்டச்செயலர் வெல்லமண்டி சோமு, காங்கிரஸ் கட்சியின் சார்பில், மாவட்டத் தலைவர்கள் வி.ஜவஹர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாவட்டச் செயலர் அருள் தலைமையில் அந்தந்த கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்தனர். மேலும், பெரியார் மணியம்மை கல்வி நிறுவனங்களின் சார்பில் மாணவர்கள், ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகத்தினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தேமுதிக சார்பில், மாநகர் மாவட்டச் செயலர் டி.வி. கணேஷ் தலைமையில் திருவெறும்பூரில் உள்ள பெரியார் சிலைக்கு கட்சியினர் மாலை அணிவித்தனர். இதேபோல, மாநகரின் பல்வேறு இடங்களில் உள்ள பெரியார் சிலைகளுக்கும், உருவப்படத்துக்கும் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மணப்பாறையில்...
மணப்பாறையில் பெரியாரின் 140ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு கட்சிகள் சார்பில் திங்கள்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
மணப்பாறை பேருந்து நிலையம் அருகேயுள்ள பெரியார் சிலைக்கு திராவிடர் கழகத்தைச் சேர்ந்த தியாகசுந்தரம், ரமேஷ், பாலு, ஆனந்த், திமுகவைச் சேர்ந்த துரை.காசிநாதன்,விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகி மதனகோபால், சத்தியசீலன், ஆதிதிராவிடர் நலப் பேரவை ஆதி.பெரு.பழனியப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதேபோல, மதிமுக மாநில மாணவரணி செயலாளர் மணவை.தமிழ்மாணிக்கம், நகரச் செயலாளர் முத்துபாண்டி தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. 
ஸ்ரீரங்கத்தில்...
ஸ்ரீரங்கம் காவல் நிலையம் வாசலில் உள்ள பெரியார் அதிமுக, திமுக, திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சி பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதேபோல, ஸ்ரீரங்கம், திருவானைக்கா வில் திராவிடர் கழக இளைஞரணி சார்பில் கொடியேற்றப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘உன்ன நினைச்சதும்’.. சித்தி இத்னானி!

ஃபேமிலி ஸ்டார் டிரைலர்!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.1,25,000 சம்பளத்தில் இலங்கையில் ஆசிரியர் பயிற்றுநர் வேலை!

‘இஸ்ரேல் தனித்து செயல்படும்’ : நெதன்யாகு பதில்!

எம்.பி. சீட் கொடுக்காததால் கணேசமூர்த்தி தற்கொலையா? வைகோ பதில்

SCROLL FOR NEXT