எச்.ஐ.வி.  குழந்தைகளுடன் கலந்துரையாடல்

திருச்சி இறகுகள் அமைப்பின் சார்பில் எச்.ஐ.வி. தொற்றுடன் வாழும் குழந்தைகளுக்கான விளையாட்டு, கலந்துரையாடல் நிகழ்ச்சி அண்மையில் நடத்தப்பட்டது.

திருச்சி இறகுகள் அமைப்பின் சார்பில் எச்.ஐ.வி. தொற்றுடன் வாழும் குழந்தைகளுக்கான விளையாட்டு, கலந்துரையாடல் நிகழ்ச்சி அண்மையில் நடத்தப்பட்டது.
எச்ஐவி தொற்றுடன் வாழும் குழந்தைகளை மகிழ்விக்கும் வண்ணம், அவர்களை ஸ்ரீரங்கம் மேலூர் பகுதியிலுள்ள வண்ணத்துப்பூச்சி பூங்காவுக்கு இறகுகள் அமைப்பினர் அழைத்துச் சென்று, அவர்களுக்கான விளையாட்டை நடத்தினர். தொடர்ந்து அவர்களுடன் கலந்துரையாடலும் நடத்தப்பட்டது.
தொடர்ந்து குழந்தைகளுக்கு மதிய விருந்து அளிக்கப்பட்டதுடன், ஒரு மாதத்துக்குத் தேவையான ஊட்டச்சத்துப் பொருள்கள், சத்துமாவு, கொண்டைக்கடலை, அரிசி, பேரிச்சம்பழம் போன்ற பொருள்கள் வழங்கப்பட்டன.  இதனை இறகுகள்  அமைப்பின் நிறுவனர் ஜே. ராபின், ஒருங்கிணைப்பாளர் பார்கவி உள்ளிட்டோர் வழங்கினர். திட்ட ஒருங்கிணைப்பாளர் விவேகானந்தன், மரியமெர்சி ஆகியோர் விழா ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com