திருச்சி

மணவை தமிழ்மன்ற இலக்கியச் சந்திப்பு

DIN

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் மணவைத் தமிழ்மன்ற இலக்கியச் சந்திப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை இரவு சௌமா பப்ளிக் ஸ்கூலில் நடைபெற்றது. 
சங்கத்தின் நிறுவனர் தலைவர்களில் ஒருவரான இரும்பொறை ச. பிச்சை தலைமையில் நடைபெற்ற விழாவில் பொன்னுச்சாமி, தாழை.நா. இளவழகன்,  வரதராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவிஞர் த. இந்திரஜித், எழுத்தாளர் ஜவகர்ஆறுமுகம், ஏகம்மை ஆகியோர் வாழ்த்தினர். நிகழ்ச்சியில் போட்டிகளில் வென்ற பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மன்ற புரவலர் சௌமா. ராஜரத்தினம் பரிசளித்தார். பேராசிரியர் முனைவர் சோ. சத்தியசீலன் சிறப்புரையாற்றினார். ஏற்பாடுகளை மன்றத் தலைவர் கரு. ராஜகோபாலன், செயலர் நவமணி சுந்தரராஜ் ஆகியோர் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாயக் குரலாள்... ஸ்ரேயா கோஷல்!

சூர்யா 44: அதிகாரபூர்வ அறிவிப்பு!

இதுவல்லவா ஃபீல்டிங்...

அழகு பா(ர்)வை.. நேகா ஷெட்டி!

‘மஞ்சள் அழகி’ ரேஷ்மா...!

SCROLL FOR NEXT