திருச்சி மாவட்டம், மணப்பாறையில் ஆதார் கார்டுக்காக புதிய பதிவுகள் செய்யவும், பழைய கார்டுகளில் திருத்தவும் வட்டாட்சியரகம் மற்றும் நகராட்சி அலுவலகம் என 2 மையங்கள் மட்டுமே செயல்பட்டு வந்தன.
இந்நிலையில் திங்கட்கிழமை நகராட்சி அலுவலகத்தில் செயல்பட்ட ஆதார் பதிவு மையத்தில் பணியில் இருந்த ஒப்பந்த ஊழியர் கூடுதலாக பொதுமக்களிடம் பணம் வசூலித்ததாக பணிநீக்கப்பட்டதாகக் கூறி தனியார் ஒப்பந்த நிறுவனம் செவ்வாய் மற்றும் புதன்கிழமை நகராட்சி அலுவலகத்தில் செயல்பட்டு வந்த ஆதார் பதிவு மையத்தை திறக்கவில்லை. இதனால் மணப்பாறை பகுதி மக்கள் ஆதார் பதிவு செய்யமுடியாமல் தவிக்கின்றனர்.