துறையூர் சிவன் கோயிலில் நடந்த சனிப்பிரதோச வழிபாட்டில் பங்கேற்ற 2 பெண்களிடமிருந்து 12.5 பவுன் தங்க சங்கலிகளை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.
துறையூர் ஆத்தூர் சாலையில் உள்ள நந்திகேஸ்வரர் கோயிலில் நடந்த சனிப்பிரதோச விழாவில் பங்கேற்ற துறையூர் அரசு மருத்துவமனை அருகே வசிக்கும் ஓய்வு பெற்ற தமிழாசிரியர் வரதராஜன் மனைவி ராஜலெட்சுமி (60) அணிந்திருந்த 9 பவுன் தாலிக்கொடியையும், திருச்சி சாலையில் உள்ள வீட்டு வசதி வாரிய புதிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற வேளாண் துறை பதிவு எழுத்தரான பூங்கோதை (63) அணிந்திருந்த மூன்றரை பவுன் தங்கச் சங்கிலியையும் மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர். இருவரும் கொடுத்த தகவலின்பேரில் போலீஸார் விசாரிக்கின்றனர்.