மைய நூலகத்தில் இன்று மகளிருக்கான மருத்துவ முகாம்

திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் மகளிருக்கான மருத்துவ முகாம் செவ்வாய்க்கிழமை ( செப்.25) நடைபெறுகிறது.

திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் மகளிருக்கான மருத்துவ முகாம் செவ்வாய்க்கிழமை ( செப்.25) நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட நூலக அலுவலர் அ.பொ. சிவகுமார் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் மகளிருக்கான வாசகர் வட்ட அமைப்புத் தொடங்கப்பட்டு, மகளிருக்கான சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இதன் ஒரு பகுதியாக, மகளிர் தினத்தையொட்டி  மாவட்ட மைய நூலகம் மற்றும் மகளிர் வாசகர் வட்டம் சார்பில் மகளிருக்கான மருத்துவ முகாம்  பிற்பகல் 2.30-க்கு  நடைபெறுகிறது.
இந்த முகாமில் ஆரோக்கிய வாழ்க்கை மற்றும் நோய்கள் தடுக்கும் முறைகள் என்ற தலைப்பில் மருத்துவர் ரமணி சென்னியப்பன் சிறப்புரையாற்றுகிறார். தொடர்ந்து மகளிருக்கான ரத்த அழுத்தம், உடல் பருமன், நீரிழிவு நோய் கண்டறிதலுக்கான பரிசோதனை செய்யப்பட்டு, தகுந்த மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படும். எனவே இந்த முகாமை பெண்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com