ஸ்ரீரங்கம் இ.பி. அலுவலகம் அருகே செவ்வாய்க்கிழமை மாலை அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம் நடைபெற்றது.
முன்னதாக இலங்கையில் நடைபெற்ற போருக்கு உதவியதன்மூலம் பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் படுகொலைக்கு காரணமான திமுக- காங்கிரஸ் கட்சியினரை போர்க்குற்ற விசாரணைக்குட்படுத்தி தண்டிக்க வலியுறுத்தி திருச்சி மாநகர், புறநகர் மாவட்ட கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதையடுத்து பொதுக்கூட்டம் தொடங்கியது. மாநகர் மாவட்டச் செயலரும், எம்.பியுமான ப. குமார் தலைமை வகித்தார். புறநகர் மாவட்டச் செயலரும், மாநிலங்களவை உறுப்பினருமான டி. ரத்தினவேல் வரவேற்றார். சிறப்பு பேச்சாளராக செய்தித் தொடர்பாளர் லியாகத் அலிகான் பேசினார். அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், எஸ். வளர்மதி, கழக அமைப்பு செயலர் மு. பரஞ்ஜோதி, எம்எல்ஏக்கள் ஆர். சந்திரசேகர், எம். செல்வராஜ், பரமேஸ்வரி முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.