திருச்சியில் இருசக்கர வாகனங்கள் தொடர் திருட்டில் ஈடுபட்ட வந்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.
மாநகரப் பகுதிகளில் தொடர்ச்சியாக இரு சக்கர வாகனங்கள் திருட்டு நடைபெற்றதால், தனிப்படை அமைத்து குற்றவாளிகளைக் கைது செய்ய மாநகரக் காவல் ஆணையர் அ. அமல்ராஜ் உத்தரவிட்டார்.
அதன்படியில் தனிப்படை போலீஸார் விசாரணை மேற்கொண்ட போது, மணிகண்டத்தைச் சேர்ந்த ஆ. தாமஸ் (20) மற்றும் 15 வயது சிறார் ஆகிய இருவரும் வாகனத் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து கே.கே.நகர், எ.புதூர், கண்டோன்மென்ட் காவல் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் திருடப்பட்ட 7 இரு சக்கர வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இதைத் தொடர்ந்து தாமஸை கைது செய்த போலீஸார், 15 வயது சிறாரை கூர்நோக்கு இல்லத்துக்கு அனுப்பி வைத்தனர்.