மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது

துறையூரில்   மோட் டார் சைக்கிளைத் திருடியவர் கைது செய்யப்பட்டார்.

துறையூரில்   மோட் டார் சைக்கிளைத் திருடியவர் கைது செய்யப்பட்டார்.
துறையூர் கீழரத வீதியைச் சேர்ந்தவர் மு. வைரம் (36). இவர், கடந்த 11 ஆம் தேதி இரவு தனது வீட்டின் முன்பு நிறுத்தி வந்த  மோட்டார் சைக்கிளைக் காணவில்லை என காவல் நிலையத்தில்புகார் அளித்தார்.
இதுகுறித்து துறையூர் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர்.  இந்நிலையில்,காவல் உதவி ஆய்வாளர் செல்லப்பா தலைமையிலான போஸீஸார் ஆத்தூர் சாலையில் சனிக்கிழமை இரவு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த ஒருவரைப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்  சௌண்டீசுவரி கோயில் தெருவைச் சேர்ந்த சு. பிரேம்குமார் (24) என்பதும், அவர் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் வைரத்துக்குச் சொந்தமானது என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து பிரேம்குமாரை போலீஸார் கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com