திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே மனநலன் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற 74 வயது முதியவர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.
வையம்பட்டி ஒன்றியம், நடுப்பட்டியைச் சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க மனநலன் பாதிக்கப்பட்ட பெண் திங்கள்கிழமை வீட்டில் இருந்த போது, திடீரென அலறல் சப்தம் கேட்டது. இதையறிந்து அவரது உறவினர் பெண். அங்கு வந்தபோது கதவு தாழிட்டு இருந்ததும், அங்கு அதே கிராமத்தைச் சேர்ந்த பொம்முரெட்டி (74) இருந்ததையும் அவர் பார்த்துள்ளார்.
மற்றவர்களை அழைத்து வர அப்பெண் சென்ற போது பொம்முரெட்டி அங்கிருந்து ஓடிவிட்டாராம். இதுகுறித்து வையம்பட்டி காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிந்து பொம்முரெட்டியை கைது செய்தனர்.