மாசி பௌர்ணமி : திருவானைக்காவில் நால்வர் புறப்பாடு

மாசி பௌர்ணமியையொட்டி திருவானைக்கா அருள்மிகு அகிலாண்டேசுவரி அம்மன் உடனுறை

மாசி பௌர்ணமியையொட்டி திருவானைக்கா அருள்மிகு அகிலாண்டேசுவரி அம்மன் உடனுறை சம்புகேசுவரர் திருக்கோயிலில் நால்வர் புறப்பாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாதந்தோறும் பௌர்ணமியன்று திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோர் புறப்பாடாகி, 5 ஆம் பிரகாரத்தை கிரிவலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பது வழக்கம்.
நிகழ் மாதத்தில்  பௌர்ணமியோடு மாசி மகமும் இணைந்து வந்ததால், செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு நால்வருக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, கயிலாய வாத்தியத்துடன் 5 ஆம் பிரகாரத்தை வலம் வந்தனர். ஏராளமான சிவபக்தர்கள் நிகழ்வில் பங்கேற்று சிவமந்திரத்தை உச்சரித்து வலம் வந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com