வேங்கை மண்டலம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பாரமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் வியாழக்கிழமை (பிப்.21) காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:
சிறுகாம்பூர் பிரிவு அலுவலகத்துக்குள்பட்ட மூவானூர், வேங்கை மண்டலம், தண்ணீர் பந்தல், மேலக்கண்ணுக்குளம், கீழக் கண்ணுக்குளம், பார்வதிபுரம், குருவம்பட்டி, கல்லூர், வேப்பந்துரை, சோழங்கநல்லூர், செந்தாமரைக்கண், சிறுகாம்பூர், நெ.2 கரியமாணிக்கம், சென்னகரை, ராமகிரிப்பட்டி, செங்குடி, வாழ்மால்பாளையம், செட்டிமங்கலம், நெய்வேலி, கிளியநல்லூர், வாத்தலை, வி. மணியம்பட்டி, சிலையாத்தி, துடையூர், பாண்டியபுரம், சுனைப்புகநல்லூர், ஈச்சம்பட்டி, மண்ணச்சநல்லூர் மேற்கு மற்றும் நகரியம் ஆகிய பிரிவு அலுவலகங்களுக்குள்பட்ட இடங்களில் மின்விநியோகம் இருக்காது.
மேலும், மூவராயம்பாளையம், கவுண்டம்பட்டி, குருவிக்காரன்குளம், காட்டுக்குளம், தீராம்பாளையம், தில்லாம்பட்டி, பழையூர், செங்குழிப்பட்டி, உடையாம்பட்டி, திருப்பைஞ்ஞீலி, திருவரங்கப்பட்டி, பெரமங்கலம் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் ஜி. சேகர் தெரிவித்துள்ளார்.