உறையூர் பணிக்கன்தெருவைச் சேர்ந்த மணிகண்டன் மனைவி ஈசுவரி (27). செவ்வாய்க்கிழமை வீட்டில் தனியாக இருந்தார். அப்போது புத்தகம் விற்பவர் போல வந்த ஒருவர் வீட்டுக்குள் சென்று, ஈசுவரி கண்ணில் மிளகாய்ப் பொடியைத் தூவி, அவர் கழுத்திலிருந்த ஒரு பவுன் தாலிச்சங்கிலியைப் பறித்துச் சென்றார். இதுகுறித்து உறையூர் போலீஸார் வழக்குப்பதிந்து, நகையைப் பறித்துச் சென்ற அடையாளம் தெரியாத நபரைத் தேடி வருகின்றனர்.