உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு திருச்சி தமிழ்ச் சங்கத்தில் உள்ள தமிழ்த் தாய் சிலைக்கு தமிழ் ஆர்வலர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
திருச்சி எழுதமிழ் இயக்கம் சார்பில் தமிழ்ச் சங்க வளாகத்தில் உள்ள தமிழ்த் தாய் சிலைக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, இயக்கத் தலைவர் மு.குமரசாமி தலைமை வகித்தார். தமிழக புலவர் குழு பொறுப்பாண்மை குழு செயலர் கி.ஆ.பெ.வி. கதிரேசன், திருச்சி தமிழ்ச் சங்கத் தலைவர் ஐ. அரங்கராஜன், கோவிந்தம்மாள் தமிழ் மன்ற பொறுப்பாளர் ப. நாகராசன், தென்னக ரயில்வே உபயோகிப்பாளர் ஆலோசனைக் குழு உறுப்பினர் கா.பி. பாலு, கவிஞர் மாரிமுத்து, பாலகிருஷ்ணன், ஐடா ராஜகுமாரி உள்ளிட்ட தமிழ் ஆர்வலர்கள் பலர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.