ஸ்ரீரங்கத்தில் சமையல் செய்யும் போது தீக்காயமடைந்த மூதாட்டி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
ஸ்ரீரங்கம் டிரைனேஜ் தெருவைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி மனைவி ருக்மணி (80). வியாழக்கிழமை வீட்டில் மண்ணெண்ணெய் அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக சேலையில் தீப்பற்றியது.
பலத்த காயங்களுடன் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ருக்மணி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். ஸ்ரீரங்கம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.